சுதந்திர தினத்தில் இரு சுதந்திர உரிமைச் சர்ச்சைகள்!

mohan bhawat flag hoisting - 2026

நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தைக் குறித்தான இரு வேறு அமைப்பு ரீதியான சர்ச்சைகளையும் பேச்சுரிமை, சுதந்திர உரிமை ஆகியன குறித்தும் விவாதத்தைக் கிளப்பி விட்டது.

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் கம்யூனிஸ இயக்கங்களைச் சேர்ந்த இருவருக்கு நேர்ந்த நெருக்கடிகள், சுதந்திர தினத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் கேரள மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இங்கே பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட கரங்கி அம்மன் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒட்டி மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல் வெளியானதும் அரசு உதவிபெறும் அந்தப் பள்ளியில் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்ற பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மரிக்குட்டி தடை விதித்தார். சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட மரபுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சுதந்திர தின விழாக்களின்போது பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்ற முடியும் என்பதை மேற்கோள் காட்டி இந்தத் தடையை விதித்தார்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

ஆனால், அந்தத் தடையை மீறி ஆக. 15 அன்று காலை கரங்கி அம்மன் பள்ளிக்கு வந்த மோகன் பாகவத் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவுக்கு ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த அன்னிய அரசும் அவ்வளவு எளிதாக சுதந்திரத்தைத் தந்து விடவில்லை. 1857 முதல் 1947 வரை பல தலைவர்கள் அனைத்தையும் தியாகம் செய்து, பல சித்ரவதைகளை அனுபவித்து இந்த சுதந்திரத்தை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்தனர். நாட்டில் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை நீத்தவர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்ந்து, அதே வகையில் நமது வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும். நமது சுதந்திரம் என்பது மிகவும் புனிதமானது, அதை நாம் அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.” என்று பேசினார்.

இது குறித்த பின்னணியில், அரசு உதவி பெறும் பள்ளி என்பதால், இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் கொடியேற்ற ஆட்சியர் தடை உத்தரவை முந்திய நாள் இரவு 11.30க்குதான் அந்தப் பள்ளித் தாளாளருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், நாட்டில் எவர் வேண்டுமானாலும் கொடி ஏற்றலாம் என்பதால், மோகன் பாகவத் கொடி ஏற்ற பள்ளியின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் சர்ச்சைகளைத் தவிர்க்க, பள்ளியில் தேசியக் கொடி ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் அல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப் பட்டது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இந்தச் சர்ச்சை ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப தூர்தர்சன் மறுத்தது இன்னொரு புறத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சுதந்திர தினத்தன்று முதல்வரின் உரையை நிகழ்த்த அவருக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷன் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் 6 நிமிட உரையை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்புவதாக இருந்தது. ஆனால், மாணிக் சர்க்கார், தமது உரையில் நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதாகவும், பசுப் பாதுகாவலர்கள் அடாவடி என்றும், அரசியல் மற்றும் பிரிவினை ரீதியான சில கருத்துகளை உரையில் குறிப்பிட்டிருந்ததால், முதல்வரின் உரையில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு மாநில அரசுக்கு தூர்தர்ஷன் கேட்டுக்கொண்டது.

ஆனால், தூர்தர்ஷனின் கோரிக்கையை திரிபுரா அரசு செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து திரிபுரா முதல்வரின் பிரத்யேக உரையை தூர்தர்ஷன் ஒளிபரப்பவில்லை. இதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் தூர்தர்ஷன் தரப்பில் அளிக்கப் பட்ட விளக்கத்தில், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், கொடியேற்று வைபவங்கள் உள்ளிட்ட அதிகாரப் பூர்வ நிகழ்ச்சிகளை அரை மணி நேர செய்திக் கோவையாக ஒளிபரப்பியதாகக் கூறியது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

சுதந்திர தினத்தில் நிகழ்ந்த பேச்சுரிமை, சுதந்திர கொடியேற்று உரிமை தொடர்பான இருவேறு சம்பவங்கள், ஆட்சியிலும் அரசியல் புகுந்து ஆட்டிப் படைப்பதையே காட்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories