December 6, 2025, 5:36 PM
29.4 C
Chennai

கொடைக்கானலில் நிகழ்ந்த இரோம் ஷர்மிளா திருமணம்!

IMG 20170817 WA0018 - 2025

காதலரை கரம் பிடித்த இரோம் ஷரமிளா

சென்னை:

கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை திருமணம் செய்து கொண்டார் மணிப்பூர் மங்கை இரோம் ஷர்மிளா.

மணிப்பூரில் ராணுவ சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் இரோம் ஷர்மிளா. பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு திடீரென அரசியலில் குதித்தார்.

அண்மையில் மணிப்பூரில் நடைபெற்ற தேர்தலில் இரோம் ஷர்மிளா போட்டியிட்டார். தாம் நெடுநாட்கள் மணிப்பூர் மக்களுக்காகப் போராடியதால் அரசியலில் தனக்கு குறிப்பிடத் தகுந்த ஆதரவு கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில், அவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இதனால் தாம் மணிப்பூர் மாநிலத்தை விட்டே வெளியேறுவதாகக் கூறி, தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் தஞ்சம் புகுந்தார். அவருடன் அவரது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவும் கொடைக்கானல் வந்தார். பின்னர் போராட்ட வாழ்க்கையை விடுத்து, திருமண வாழ்க்கையை வாழ்வது என்று இரோம் ஷர்மிளா முடிவு செய்தார். தனது திருமணம் குறித்தும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமணப் பதிவுக்காக விண்ணப்பம் செய்திருந்தார் இரோம் ஷர்மிளா. அவர்களது விண்ணப்பம் பரீசிலிக்கப்பட்டு சார் பதிவாளர் முன்னிலையில் இன்று தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சார் பதிவாளர்கள், ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தேஷ்மந்த் கோட்டின்கோ கொடைக்கானலில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories