ஹிந்தி நடிகர் சல்மான் கானின் தந்தையும், பிரபல திரைப்படக் கதாசிரியருமான சலீம் கான் உள்ளிட்ட 5 பேர், 2015ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஏற்க மறுத்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக மாநிலங்களவையில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பத்ம விருதுகளை வழங்குவதற்கு முன்பு, அந்த விருதுகளை ஏற்பது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, விருதை ஏற்க சம்மதிப்பவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். 2015ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை சலீம் கான் உள்ளிட்ட 5 பேர் ஏற்க மறுத்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Popular Categories



