ரயில் நடைமேடைக் கட்டண உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரயில் நிலைய நடைமேடை கட்டணம் தற்போதுள்ள 5.ரூபாய் என்பதனை பத்து ரூபாயாக வசூலிக்கப்படும் என இரயிலவே நிர்வாகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இரயில் நிலையங்களுக்கு தங்களது உறவினர்களை, நண்பர்களை வரவேற்கவும், வழியனுப்பவும், தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களிடம் நடைமேடை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடைமேடை கட்டணம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ரூபாய் பத்து என்று உயர்த்தியிருப்பதும் பண்டிகை காலங்களில் மேலும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மண்டல மேலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. இரயில்வே நிர்வாகம் வரம்பற்ற முறையில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதை கைவிட்டு நடைமேடை கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
Popular Categories



