ரயில் நடைமேடைக் கட்டண உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரயில் நிலைய நடைமேடை கட்டணம் தற்போதுள்ள 5.ரூபாய் என்பதனை பத்து ரூபாயாக வசூலிக்கப்படும் என இரயிலவே நிர்வாகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இரயில் நிலையங்களுக்கு தங்களது உறவினர்களை, நண்பர்களை வரவேற்கவும், வழியனுப்பவும், தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களிடம் நடைமேடை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடைமேடை கட்டணம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ரூபாய் பத்து என்று உயர்த்தியிருப்பதும் பண்டிகை காலங்களில் மேலும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மண்டல மேலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. இரயில்வே நிர்வாகம் வரம்பற்ற முறையில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதை கைவிட்டு நடைமேடை கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
ரயில் நடைமேடைக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும்: கம்யூனிஸ்ட்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

