மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதுகுறித்து, முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பது: இது உணர்வு ரீதியான பிரச்னை ஆகும். மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதால், இதனை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் என அந்தப் பதிவில் மம்தா கூறியுள்ளார்.
Popular Categories



