உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று மெல்பர்னில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்திய வங்க தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 126 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடித்து 137 ரன் குவித்தார். ஷிகர் தவன் 30 ரன்னும் கோலி 3 ரன்னும் ரஹானே 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சுரேஷ் ரெய்னா மிக அழகாக ஆடி 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 65 ரன் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ஜடேஜா 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன் எடுத்தார். இறுதியில் வங்க தேச அணிக்கு வெற்றி இலக்காக 303 ரன் நிர்ணயித்தது இந்தியா.
303 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது இந்தியா
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

