உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று மெல்பர்னில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்திய வங்க தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 126 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடித்து 137 ரன் குவித்தார். ஷிகர் தவன் 30 ரன்னும் கோலி 3 ரன்னும் ரஹானே 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சுரேஷ் ரெய்னா மிக அழகாக ஆடி 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 65 ரன் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ஜடேஜா 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன் எடுத்தார். இறுதியில் வங்க தேச அணிக்கு வெற்றி இலக்காக 303 ரன் நிர்ணயித்தது இந்தியா.
Popular Categories



