December 16, 2025, 9:14 AM
26.4 C
Chennai

கொரோனா: சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை! மருத்துவர் அத்துமீறல்!

vankodumai 1 - 2025

பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இயங்கும் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்த பெண் நோயாளியிடம் தகாத முறைகளில் நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி இரவு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கூறிய பாதிக்கப்பட்ட பெண், பரிசோதனை செய்வதாக கூறி அறைக்குள் நுழைந்த மருத்துவர் தன்னுடைய அனுமதியின்றி உடலின் பாகங்களை தகாத முறையில் தொட்டதாகவும், மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி, கொரோனா வார்டின் நோடல் அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து, கடந்த ஜூலை 30-ஆம் தேதி மருத்துவமனையில் புகார் அளிக்கப்பட்ட பின் வி.வி.புரம் காவல் நிலையத்திலும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் இதுவரை போதுமான விவரங்களை வழங்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான அறிக்கையின்படி, சம்பவம் நடந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறும் போது, இந்த குற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவரை அடையாளம் காட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனை தனது அறிக்கையின் விவரங்களை போலீசில் சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

Topics

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

பஞ்சாங்கம் டிச.15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அட இவரா..? பாஜக.,வின் தேசிய செயல் தலைவர் அறிவிப்பு!

பாஜவின் தேசிய செயல் தலைவராக பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

Entertainment News

Popular Categories