ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் 9 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் ராஜ்பாக் காவல் நிலையத்திற்குள் காலை 6 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் ராணுவ உடையில் புகுந்த பயங்கரவாதிகள் 3 பேர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் இரவு ஜம்மு காஷ்மீரில் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படை மற்றும் மாநில போலீசார் விரைந்து சென்று, சுற்றி வளைத்தனர். அங்கே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு-பதான்கோடே நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீர்: காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸார் 3 பேர் உயிரிழப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

