இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி மிக்கவர்கள்: ராஜ்நாத் சிங்

Published:

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பு குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கில் அவர் பேசியபோது, “வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் நாடாக விளங்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. உலகிலேயே இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் முஸ்லிம்கள் வசிப்பது நம் நாட்டில்தான். இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள். அடிப்படைவாதக் கொள்கைகள் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும், பயங்கரவாதம் என்பது இந்திய முஸ்லிம்களுக்கு அன்னியமான ஒரு விஷயம். எனவேதான் இந்திய முஸ்லிம்களை ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈர்க்க முடியவில்லை. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சொற்ப எண்ணிக்கையிலேயே இந்திய இளைஞர்கள் இணைந்ததாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சில இளைஞர்கள் அந்த அமைப்பிலிருந்து திரும்பி வந்துவிட்டனர் என்றார் அவர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img