நாகப்பட்டினம் அருகே நீதித் துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) மீது மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் லதா, கூடுதல் பொறுப்பாக நாகப்பட்டினம் மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பதவியையும் வகித்து வருகிறார். புதன் நேற்று காலை பணிக்கு வந்தவர் மாலை பணி முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பினார். காரில் ஓட்டுநர் சதீஷ்குமார், உதவியாளர் தனபால் உடன் இருந்தனர். வேளாங்கண்ணி பேராலயம் சென்று விட்டு, வேதாரண்யம் செல்லும் வழியில் பிராதபராமபுரம் என்னும் இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், மாஜிஸ்திரேட் வந்த கார் கண்ணாடிகளையும் உடைத்து நடுவரை கட்டையாலும், ஓட்டுநரை கையாலும் தாக்கிவிட்டு தப்பினர். இதில் காயமடைந்த மாஜிஸ்திரேட் லதா, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனையிலும், பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தலையில் காயமடைந்ததால் அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் லதாவை மாவட்ட நீதிபதி சிவக்குமார் சந்தித்து விவரம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாஜிஸ்திரேட் லதா அளித்த புகாரின் அடிப்படையில் ஆயுதங்களால் தாக்குதல், கொலை முயற்சி, கும்பலாக சேர்ந்து ஆயுதங்களுடன் தாக்குதல், வழிமறித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதித் துறை நடுவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: போலீஸார் விசாரணை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

