நீதித் துறை நடுவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: போலீஸார் விசாரணை

நாகப்பட்டினம் அருகே நீதித் துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) மீது மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் லதா, கூடுதல் பொறுப்பாக நாகப்பட்டினம் மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பதவியையும் வகித்து வருகிறார். புதன் நேற்று காலை பணிக்கு வந்தவர் மாலை பணி முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பினார். காரில் ஓட்டுநர் சதீஷ்குமார், உதவியாளர் தனபால் உடன் இருந்தனர். வேளாங்கண்ணி பேராலயம் சென்று விட்டு, வேதாரண்யம் செல்லும் வழியில் பிராதபராமபுரம் என்னும் இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், மாஜிஸ்திரேட் வந்த கார் கண்ணாடிகளையும் உடைத்து நடுவரை கட்டையாலும், ஓட்டுநரை கையாலும் தாக்கிவிட்டு தப்பினர். இதில் காயமடைந்த மாஜிஸ்திரேட் லதா, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனையிலும், பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தலையில் காயமடைந்ததால் அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் லதாவை மாவட்ட நீதிபதி சிவக்குமார் சந்தித்து விவரம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாஜிஸ்திரேட் லதா அளித்த புகாரின் அடிப்படையில் ஆயுதங்களால் தாக்குதல், கொலை முயற்சி, கும்பலாக சேர்ந்து ஆயுதங்களுடன் தாக்குதல், வழிமறித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories