நீதித் துறை நடுவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: போலீஸார் விசாரணை

நாகப்பட்டினம் அருகே நீதித் துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) மீது மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் லதா, கூடுதல் பொறுப்பாக நாகப்பட்டினம் மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பதவியையும் வகித்து வருகிறார். புதன் நேற்று காலை பணிக்கு வந்தவர் மாலை பணி முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பினார். காரில் ஓட்டுநர் சதீஷ்குமார், உதவியாளர் தனபால் உடன் இருந்தனர். வேளாங்கண்ணி பேராலயம் சென்று விட்டு, வேதாரண்யம் செல்லும் வழியில் பிராதபராமபுரம் என்னும் இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், மாஜிஸ்திரேட் வந்த கார் கண்ணாடிகளையும் உடைத்து நடுவரை கட்டையாலும், ஓட்டுநரை கையாலும் தாக்கிவிட்டு தப்பினர். இதில் காயமடைந்த மாஜிஸ்திரேட் லதா, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனையிலும், பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தலையில் காயமடைந்ததால் அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் லதாவை மாவட்ட நீதிபதி சிவக்குமார் சந்தித்து விவரம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாஜிஸ்திரேட் லதா அளித்த புகாரின் அடிப்படையில் ஆயுதங்களால் தாக்குதல், கொலை முயற்சி, கும்பலாக சேர்ந்து ஆயுதங்களுடன் தாக்குதல், வழிமறித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories