சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தத்துக்கான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை வெள்ளிக்கிழமை இன்று நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர் 12-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 11-ஆம் தேதி 42 தொழிற்சங்கத்தினரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையும், 12-ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டன. இந்த இரண்டு பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிந்தது. நிதி தொடர்பான பிற கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
போக்குவரத்துத் தொழிலாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

