ரேபரேலி அருகே ரயில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

Published:

train-derailed-re-bareily உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலை ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர் என ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். பச்ரவான் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காமல் சிக்னலை மீறி நிற்க முயன்றதால் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே தகவல் தொடர்பு அதிகாரி அனில் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து காரணமாக ரேபரேலி வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்று பாதையில் விடப்பட்டன.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img