மக்களுக்கு எச்சரிக்கை செய்தியுடன், தொடர்பு நம்பரும் அளித்த சைபர் கிரைம்!

Hacker - 2026

இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது.

அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர் ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின் தன்னை ஏமாற்றியதை அறிந்து கொண்ட ராமகிருஷ்ண பிரபு கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ண பிரபுவை ஏமாற்றிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1 1/2 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இதைப்போன்று ராதாகிருஷ்ணன் என்பவர் தனது கைபேசிக்கு வந்த ஒரு மெசேஜை நம்பி தனது ஏடி.எம் கார்டு விவரத்தை அதில் பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

அதன்பின் அவரின் ஏடி.எம் கார்டில் இருந்த ரூபாய் 1,25,000 பணத்தை மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த மர்ம நபரை கண்டுபிடித்து அவரிடம் இருந்த 1,25,000 ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் ஸ்ரீ தீபா என்பவர் தனது போனில் உள்ள நெட் பேங்க் மூலமாக வேறு ஒருவருக்கு தெரியாமல் பணம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த முகம் தெரியாத நபரிடம் இருந்து ஸ்ரீ தீபாவின் பணம் 1,00,000 ரூபாயை மீட்டுக் கொடுத்துள்ளது.

இதேபோல் மத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் எஸ்தர் ராணி என்பவர் தனது போனில் உள்ள போன் பே மூலமாக பணத்தை பறி கொடுத்துள்ளார். இது குறித்து இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து அவருடைய பணம் 30 ஆயிரத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இதேபோன்று துடியலூர் நல்லாம்பாளையத்தில் வசிக்கும் ரவிக்குமார் என்பவரின் கைப்பேசிக்கு வங்கிகடன் பெற்றுத் தருவதாக கூறி ஒரு மெசேஜ் வந்துள்ளது.

அந்த மெசேஜை நம்பி இவர் 19,500 ரூபாய் பணத்தை பறி கொடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ரவிக்குமார் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பணத்தை ஏமாற்றிய மர்ம நபர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் தங்களுடைய கைப்பேசிகளுக்கு வரும் எந்த ஒரு அழைப்பையும் மெசேஜையும் நம்பி பொதுமக்கள் யாரும் பணம் கட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 1930 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ALSO READ:  ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories