December 5, 2025, 4:40 PM
27.9 C
Chennai

கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுவனை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்! கண்ணீர் மல்க நன்றி கூறிய தொழிலாளி!

government vellore medical college - 2025

வேலூர் மாவட்டம், சோளிங்கர் காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சுனில்(11). இவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 25ம் தேதி இரவு தனது பெற்றோருடன் வீட்டின் வெளியே வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். நள்ளிரவு ஒரு மணியளவில் சுமார் 8 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று சுனிலை கடித்தது. ஏதோ கடிப்பதை உணர்ந்து எழுந்த சுனில் வலியால் கதறி அழுதான்.

பதறியடித்து எழுந்த பெற்றோர் பார்த்த போது அங்கு பாம்பு நெளிந்து சென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த பாம்பை அடித்துக் கொன்றனர்.

அதற்குள் சுனில் சுயநினைவை இழந்து விழுந்தான். உடனடியாக அந்த பாம்பை ஒரு பையில் போட்டுக்கொண்டு, சுனிலுடன் பைக்கில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவன் சுனிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அதற்குள் சிறுவன் சுனிலுக்கு ரத்தம் உறைந்து ஆபத்தான கட்டத்தை எட்டினான். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு மணி நேரத்தில் அழைத்து வந்து அதிகாலை 3.30 மணியளவில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் சுனிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 2 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர்/சிறுவன் அபாயக்கட்டத்தை தாண்டி நினைவு திரும்பி தனது பெற்றோரிடம் பேசினான். இதை பார்த்த பெற்றோர் கண்ணீருடன் தங்கள் மகனை பிழைக்க வைத்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories