December 6, 2025, 9:17 AM
26.8 C
Chennai

கொரோனா மே மாத இறுதியில் முடிவுக்கு வரும்: தொற்று நோய் நிபுணர்!

Kagandeep Kang
Kagandeep Kang

மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதுவரை 2.10 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 2.30 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1.72 கோடி பேர் பாதிக்கப்பட்டு தற்போது சுமார் 36 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். எனவே நாடெங்கும் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய பெண் பத்திரிகையாளர்களுடன் பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் ஒரு காணொளி சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது அவர், ‘தடுப்பூசிகளைப் பொறுத்த வரை தொற்றுக்களுக்கு எதிரான தடுப்பை அதிக அளவில் வழங்குகின்றன. நீங்கள் நோய்த் தொற்றில் இருந்து தடுக்கப்பட்டால் அந்த நோயைப் பரப்ப மாட்டீர்கள். எனவே தடுப்பூசிகள் என்பது அவசியமாக உள்ளது.

சென்ற முறை கொரோனா பரவலில் இருந்து தப்பிய பலர் தற்போது கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் காணும் போது முன்பை விட இரண்டரை முதல் நான்கு மடங்கு அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் பரவி மக்கள் தொகையைப் பெருமளவு குறைத்து வருகிறது.

மே மாத இறுதிக்குள் கொரோனா தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. முழு ஊரடங்கு இந்த பரவலைக் கட்டுப்படுத்த நன்கு உதவும். முழு ஊரடங்கு அமலாக்குவதன் மூலம் கொரோனா பரவுதல் வெகுவாக குறையும். ஊரடங்கால் இன்னும் மூன்று வாரங்களில் பரவல் மிகவும் குறையும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் மக்கள் அதற்கு முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories