பிரகதி பவனை முற்றுகையிட்ட வழக்கில்… கேசிஆரின் பேரன் கைது!

Published:

kcr-grandson-arrested
kcr-grandson-arrested

கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக மாநிலத்தில் நுழைவுத் தேர்வுகளை தாமதம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேஷனல் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா (என்எஸ்யூஐ) மாணவர்கள் புதன்கிழமையன்று பிரகதி பவனை முற்றுகையிட்டனர்.

அந்தச் சம்பவத்தில் பங்குபெற்ற முப்பத்தி ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது ஆனவர்களுள் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆரின் பேரன் ரித்தீஷ் கூட உள்ளார். ரித்தீஷ் கேசிஆரின் சகோதரர் மகளான ரம்யா ராவின் மகன்.

kcr-grandson-arrested1
kcr-grandson-arrested1

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் ரித்தீஷ் மீது எப்ஐஆர் கூட பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் அவரை ஐந்தாவது குற்றவாளியாக பதிவு செய்துள்ளார்கள். கைது செய்தவர்களை 14 நாட்கள் ரிமாண்டுக்கு அனுப்பி உள்ளனர்.

அதனால் கேசிஆரின் சகோதரர் மகள் ரம்யா ராவு டிஆர்எஸ் அரசாங்கத்தின் மீது ஆத்திரம் அடைந்துள்ளார். கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img