காங்கிரஸ் அல்லாத பிரதமராக நெடு நாள்கள்! சாதித்த மோடி!

Published:

pm modi - 2026

பிரதமர் மோடியின் அரியதான ரெக்கார்டுகள்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் ஒரு அரிதான ரெக்கார்டுக்கு சொந்தம் ஆகியுள்ளார்.

இந்தியாவை மிக அதிக காலம் பதவியிலிருந்து ஆண்ட காங்கிரசைத் தவிர பிற கட்சி பிரதமராக முன்னிலையில் உள்ளார்.

சென்ற காலத்தில் இந்த ரெக்கார்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் மீது இருந்தது. புதிதாக பிரதமர் மோடி அதனை முறியடித்துள்ளார்.

அதேபோல் அதிக காலம் பதவியில் இருந்த நான்காவது பிரதமர் கூட மோடியே. இந்த விஷயத்தை பிரசார் பாரதி பிரிவு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2268 நாட்கள் பதவியில் இருந்தார். வியாழக்கிழமை யோடு பிரதமர் மோடி அதனை முறியடித்துள்ளார்.

நரேந்திர மோடி நாட்டின் 14 வது பிரதமராக மே மாதம் 26ம் தேதி 2014ல் பதவி ஸ்வீகாரம் செய்தார். இரண்டாவது முறை பிரதமராக மே மாதம் 30ம் தேதி 2019 ல் பிரதமராக பதவிப் பொறுப்பை ஏற்றார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

நாட்டினை மிக அதிக காலம் ஆண்ட பிரதமர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் உள்ளார்கள். அவர்களில் முதலாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருடைய மகள் இந்திரா காந்தி 11 ஆண்டுகள் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தார் கள்.

தற்போதைய ரெக்கார்டுகளோடு கூட பிரதமர் மோடி அண்மையில் மற்றுமொரு ரெக்கார்டுக்குக் கூட சொந்தமாகி உள்ளார்.

அயோத்தி ராமஜென்ம பூமியை தரிசித்து கொண்ட முதல் பிரதமராக நரேந்திர மோடி ரெக்கார்டில் உள்ளார்.

மோடியை விட முன்பாக பிரதமர் பதவியில் இந்திரா, ராஜீவ், வாஜ்பேயி இருந்தாலும் பிரதமர் ஹோதாவில் அயோத்தியில் பயணித்த போது கூட ராமஜென்ம பூமியை விட்டு தூரமாக இருந்தார்கள்.

ஆகஸ்ட் 5ம் தேதி ராமஜென்ம பூமியின் பூமி பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடி பிரதமர் ஹோதாவில் ராமஜென்ம பூமியை தரிசித்து ரிக்கார்ட்
ஏற்படுத்தி உள்ளார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img