புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஹெச்.சாவந்த் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு 58 வயதாகிறது. அவர் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. 10 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுமிகள் கொடுத்த புகாரின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சாவந்தை புனே போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி தங்களை தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக, சிறுமிகள் ஆசிரியையிடம் புகார் அளிக்க, அவர் பள்ளி முதல்வருக்கு தெரிவித்தார். இதனால், இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.
10 வயது சிறுமிகள் பலாத்காரம்: 58 வயது ஐஏஎஸ் அதிகாரி கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

