கொரோனா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹான் மறைவு!

Published:

chettan-chauhan
chettan-chauhan

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌகான் ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரராகவும் அணியின் அணி மேலாளராகவும் பணியாற்றியவர் சேத்தன் சௌஹான். பின்னாளில் உத்தரப் பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

அண்மையில் அவருக்கு கொரோனா பாதிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், கொரோனா பாஸிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சேத்தன் சௌகான் ஞாயிற்றுக்கிழமை இன்று காலமானார்.

முன்னதாக, 73 வயதான சேத்தன் சௌகான், ஜூலை 12 ஆம் தேதி கோவிட் -19 பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்த பின்னர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு பிரச்னை ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img