December 6, 2025, 12:22 PM
29 C
Chennai

அன்பைப் பொழிகிறார்.. சண்டை போடுவதில்லை: 18 மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி!

divorce

கணவர் அதிக காதல் வைத்துள்ளதாகக் கூறி திருமணமான18 மாதங்களிலேயே விவாகரத்து கேட்டுள்ளார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

உத்தரப்பிரதேசத்தின் சம்பால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து கோரியுள்ளார். விவாகரத்திற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது வழக்கறிஞர்களிடம் வித்தியாசமான காரணம் ஒன்றை கூறி இருக்கிறார்.

அதாவது, தனக்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றதாகவும் இதுவரை கணவர் எந்த விஷயத்திற்கும் சண்டையே போட்டதில்லை எனவும் தன்னை மிகவும் அன்புடன் பார்த்துக்கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

அந்த பெண்ணின் இந்த பதிலால் குழம்பிய வழக்கறிஞர்கள், அவரிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோது, தன் கணவருடன் சண்டையிட வேண்டும் எனவும் அதுதான் வாழ்க்கையை நன்றாக கொண்டுசெல்லும் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவரிடம் விசாரித்தபோது, மனைவி எது கேட்டாலும் உடனே செய்துவிடுவதாகவும் அவரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். கணவருக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லாததால், கணவன் மற்றும் மனைவி என இருவருக்கும் மன நல மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்படும் என அப்பகுதி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணவர் அடிக்கடி சண்டையிடுகிறார் எனவும் துன்புறுத்துகிறார் எனவும் விவாகர்த்து கேட்கும் பெண்கள் இருக்கும் நிலையில், அதிக அன்பு வைத்திருக்கும் காரணத்தால் பெண் ஒருவர் விவாகரத்து கேட்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories