கேரளாவிலேயே இனி கிடைத்துவிடும் ‘ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ்’!

திருவனந்தபுரம்:
ஷார்ஜாவில் பயன்படுத்தும் டிரைவிங் லைசன்ஸ் இனி கேரளத்திலேயே பெற்று விடலாம். அதற்கான ஏற்பாடு விரைவில் துவங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறு முதல் கேரளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இங்கே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அப்போது, டாக்டர். ஷேக் சுல்தானிடம் கேரள முதல்வர் பிணரயி விஜயன் ஒரு கோரிக்கை விடுத்தார். அதன்படி, ஷார்ஜாவில் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் மையம் ஒன்றையும், அரபி மொழி பயிற்சி மையம் ஒன்றையும் ஏற்படுத்த சுல்தான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு வேண்டி செல்பவர்கள் கேரளாவில் அமைக்கப்படப் போகும் இந்த மையத்திலேயே டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது கேரளாவில் அமீரக துணை தூதரகம், வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது. அதற்கு சொந்தக் கட்டடம் கட்டத் தேவையான நிலத்தை வழங்க கேரள அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல் ஷார்ஜாவில் 20 ஏக்கர் நிலத்தில் கேரளா கலாச்சார மையம் ஒன்றை அமைக்க அனுமதி தருமாறு பிணரயி விஜயன், சுல்தானிடம் வேண்டுகோள் வைத்தார். இதில் கட்டடப்படும் கட்டடத்தில் கேரள மக்கள் குடும்பத்துடன் வசிக்கவும், 10 ஏக்கர் இடத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவமனை, கேரளாவின் கலாசாரம் கலை பண்பாடுகளை எடுத்துக்கூறும் மையம் அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அந்த மையத்தினுள் கேரள மக்கள் சமூக கூட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளஅனுமதி அளிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories