பாம்பன் புதிய ரயில் பாலத்தின் அழகுத் தோற்றம்; வைரலான வீடியோ!

pamban-bridge-new-angle
pamban-bridge-new-angle

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளை இணைக்கும் நாட்டின் முதல் லிஃப்ட் வகை பாலத்தின் எழில்மிகு தோற்றத்தைக் காட்டும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வரும் நிலையில்,  ராமேஸ்வரம் கடலில் புதிய பாம்பன் பாலம் கட்டும் பணிகள் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

ராமேஸ்வரம் தீவையும் பாம்பன் நிலப்பகுதியையும் இணைக்கும் 2 கிலோ மீட்டர் நீள பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில்  கட்டப்பட்டு 105 ஆண்டுகள் ஆகி விட்டது. எனவே அங்கே புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முதல் தூண் அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது..தொடர்ந்து, ரயில் பாலத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியிலும் கடலின் உள் பகுதியிலும்  தூண்கள் அமைக்க அதிநவீன எந்திரங்களின் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன.

திடீரென கொரோனா தொற்று பரவல் ஏற்பட,  பாலத்தின்  கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில  தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். 

இந்நிலையில்,  தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதாலும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இதை அடுத்து பாம்பன் புதிய ரயில் பால கட்டுமானப் பணி மீண்டும் சூடுபிடித்துள்ளது. தற்போது வரை 8 தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பாலம் எப்படி இருக்கும் என்பது குறித்த அனிமேஷன் வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. 

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதையின் குறிப்பிட்ட பகுதி லிஃப்ட் போல அப்படியே மேலே தூக்கப்படும்.  முந்தைய ஹைட்ராலிக் வகை தூக்குப் பாலத்தைப் போல் அல்லாமல், இது செங்குத்தாக மேலே லிஃப்ட் போல் தூக்கப் படும் 

இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் வெர்டிக்கிள் லிஃப்ட் பாலம்  இதுதான். இதனால், ரமேஸ்வரம் செல்லும்  சுற்றுலா பயணிகள், இனி பாம்பன் பாலத்தின் அடியில் கப்பல்கள் செல்வதைப் பார்க்கவும் குவிவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories