மோடி 70வது பிறந்த நாளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்!

Published:

nirav-shah
nirav-shah
  • பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி 70 ஆயிரம் செடிகள்.
  • பசுமையை வளர்ப்பதற்கு சூரத் துணை மேயர் முயற்சி.

சூரத்: துணை மேயர் நீரவ் ஷா பசுமையை பெருக்குவதன் ஒரு பகுதியாக செடி நடுவதில் பார்வையைச் செலுத்தியுள்ளார்.

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 17ம் தேதிக்குள் 70 ஆயிரம் செடிகளை நட வேண்டும் என்று நிச்சயித்து உள்ளார்கள்.

செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த செடி நடும் நிகழ்ச்சி 17 வரை நீடிக்கும். சூரத் நகரம் தூய்மையாக, மரங்களோடு பசுமையாக இருக்க வேண்டும் என்பதே தன் இலக்கு என்று கூறினார்.

மக்களுக்கு பசுமையின் பெருமை குறித்து விவரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் செடி நடும் நிகழ்ச்சியை ஆரம்பித்ததாக நீரவ் ஷா குறிப்பிட்டார்.

அதோடுகூட சூரத் மக்கள் தொகைக்குச் சமமாக மரங்களும் இருக்கவேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் விவரித்தார். தற்போது அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் மரங்களே என்று சூரத் துணை மேயர் கூறினார். ‘பசுமை பாரத தேசம்’ என்பததை நோக்கி மக்களை அடியெடுத்து வைக்க செய்வதற்காக நீரவ் ஷா நாடு தழுவிய மரங்கள் நடும் நிகழ்ச்சி மீது புரிதல் ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மாசு கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்வதோடு கூட இயற்கைக்கு தன்னாலான உதவி செய்வதாகக் கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img