திருமலையில் வேற்று மதத்தவர் தரிசன விவகாரம்! சூடு பிடித்த அரசியல்!

Published:

tirupati1
tirupati1

திருமலைக்கு பிற மதத்தினர் தரிசனத்துக்கு வருவது பற்றி ஒய்வி சுப்பாரெட்டி அறிவிப்பு குறித்து ஆத்திரமடைந்த ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு.

ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் பிற மதத்தினர் டிக்ளரேஷன் எதுவும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி செய்த அறிவிப்பு விவாதத்திற்கு வழி வகுத்தது.

அதுகுறித்து ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு தீவிரமாக ஆத்திரமடைந்தார். திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு டிக்ளரேஷன் எதுவும் தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் செய்த அறிவிப்பு மீது ரகளை கிளம்பியுள்ளது.

ஸ்ரீவாரி மீது பக்தி விசுவாசத்தோடு திருமலைக்கு வரும் பிற மதத்தினர் சுவாமியை தரிசிப்பதற்கு எப்படிப்பட்ட மத உறுதியும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று சேர்மன் கூறினார்.

சுப்பாரெட்டியின் அறிவிப்பு மீது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு மிகவும் தீவிரமாக ஆத்திரமடைந்தார்.

tirupathi
tirupathi

ட்விட்டர் மீது அவர் இதுகுறித்து போஸ்ட் செய்துள்ளார். டிக்ளரேஷன் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போதையது அல்ல என்றும் எத்தனையோ ஆண்டுகளாக டிடிடியில் தொடர்ந்து வரும் நிபந்தனையே இது என்றும், தான் மாணவராக இருந்தபோது திருமலையை தரிசிப்பதற்கு வந்தபோது தம்மோடு க்யூவில் வந்த ஒரு வெளிநாட்டினரை டிக்ளரேஷன் கையெழுத்து போட்ட பிறகுதான் தரிசனத்திற்கு அனுமதித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

சோனியா காந்தி தரிசனத்திற்கு வந்த போது கூட அப்போதைய காரிய நிர்வாக அதிகாரி இதுபோன்ற டிக்ளரேஷனுக்காக பிடிவாதம் பிடித்தார் என்பதால் சில தலைவர்களின் கோபத்துக்கு ஆளானார் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

iyrk-rao-tirupati
iyrk-rao-tirupati

இன்று உள்ளது உள்ளபடி இந்த மரபை எடுத்தெறிய வேண்டிய தேவை என்ன என்று அவர் வினா எழுப்பினார்.

மாநில அரசாங்கத்தின் தரப்பில் முதலமைச்சர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று எங்கும் இல்லை என்றும் நம்பிக்கை விசுவாசம் இல்லாதபோது அந்த நிகழ்ச்சியை அறநிலை துறை அமைச்சர் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img