மும்பை முழுவதும் மின்தடை!பொதுமக்கள் கடும் அவதி!

electric
electric

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகர் முழுவதும் காலை 10:05 மணி முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. மும்பை நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதால், மின்சார ரயில்கள், இதர பணிகள் தடைப்பட்டுள்ளன. டாட்டா பவர் நிறுவனத்தின் மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். 

மின் தடை காரணமாக, மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் தொழிற்சாலைகள், வீடுகள், ரயில் போக்குவரத்து, தெரு விளக்குகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு டாட்டா பவர் நிறுவன தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மின்சாரத்தை பாம்பே எலக்ட்ரிசிட்டி சப்ளை அண்டு டிரான்ஸ்போர்ட் கம்பெனி, ரிலையன்ஸ், அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் வெவ்வேறு பகுதிகளில் நுகர்வோருக்குப் பகிர்ந்தளிக்கின்றன.

adani-electric
adani-electric

இந்நிலையில் டாட்டா பவர் மின்வழங்கல் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இதனால், மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்களில் மின்பாதைகளில் மின்சப்ளை இல்லை. எனவே மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.பயணிகள் சிலர் ரயில் தடங்களில் நடந்து சென்றனர். 

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
https://twitter.com/myBESTElectric/status/1315526970742984704

நகர் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களும் வேலை செய்யவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

இதனிடையே மின் தடை சிறிது சிறிதாக சரி செய்யப் பட்டு வருவதாகவும், மும்பை சிஎஸ்டி ஸ்டேஷனில் மின் தடை சரிசெய்யப்பட்டு நிலைமை சீரடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories