December 5, 2025, 9:38 PM
26.6 C
Chennai

குஜராத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கும்: கருத்துக்கணிப்பு!

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

குஜராத்தில் இம்மாதம் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் டிச. 18 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வியாழக்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, வாக்குக் கணிப்பு முடிவுகள் மாலையில் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் சரியான முடிவுகளை கணித்து வெளியிட்டுள்ள நியூஸ் 24 ஹிந்தி செய்தித் தொலைக்காட்சியின் வாக்குக் கணிப்பில், குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 135 இடங்களில் வெற்றி பெறும்; அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா வாக்குக் கணிப்பில் குஜராத்தில் பாஜக 99 முதல் 113 இடங்களிலும், காங்கிரஸ் 68 முதல் 82 இடங்களிலும், பிற கட்சிகள் 1 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என்று கூறியுள்ளது.
“குஜராத்தில் பாஜகவுக்கு 113 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 66 தொகுதிகளும் நிச்சயமாகக் கிடைக்கும். மற்ற கட்சிகள் 3 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது’ என்று டைம்ஸ் நவ் வாக்குக் கணிப்பு உறுதியாகக் கூறியுள்ளது.
ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கணிப்பில் குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 64 தொகுதிகள் வரையே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பாஜக 117 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டிவி-விஎம்ஆர் எடுத்துள்ள கணிப்பில் மத்திய குஜராத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 16, தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு 24, காங்கிரஸுக்கு 30, வடக்கு குஜராத்தில் பாஜகவுக்கு 30, காங்கிரஸுக்கு 23 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
குஜராத்தில் ரிபப்ளிக் டி.வி- சி-வோட்டர்ஸ் நடத்திய கணிப்பில், பாஜகவுக்கு 108, காங்கிரஸுக்கு 74 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குக் கணிப்பு முடிவுகள் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “குஜராத் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு எப்போதும் உண்டு என்பது வாக்குக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சியினரின் தரம்தாழ்ந்த அரசியலால் மக்கள் குழப்பம் அடையவில்லை’ என்றார்.
குஜராத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories