குஜராத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கும்: கருத்துக்கணிப்பு!

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

குஜராத்தில் இம்மாதம் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் டிச. 18 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வியாழக்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, வாக்குக் கணிப்பு முடிவுகள் மாலையில் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் சரியான முடிவுகளை கணித்து வெளியிட்டுள்ள நியூஸ் 24 ஹிந்தி செய்தித் தொலைக்காட்சியின் வாக்குக் கணிப்பில், குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 135 இடங்களில் வெற்றி பெறும்; அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா வாக்குக் கணிப்பில் குஜராத்தில் பாஜக 99 முதல் 113 இடங்களிலும், காங்கிரஸ் 68 முதல் 82 இடங்களிலும், பிற கட்சிகள் 1 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என்று கூறியுள்ளது.
“குஜராத்தில் பாஜகவுக்கு 113 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 66 தொகுதிகளும் நிச்சயமாகக் கிடைக்கும். மற்ற கட்சிகள் 3 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது’ என்று டைம்ஸ் நவ் வாக்குக் கணிப்பு உறுதியாகக் கூறியுள்ளது.
ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கணிப்பில் குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 64 தொகுதிகள் வரையே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பாஜக 117 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டிவி-விஎம்ஆர் எடுத்துள்ள கணிப்பில் மத்திய குஜராத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 16, தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு 24, காங்கிரஸுக்கு 30, வடக்கு குஜராத்தில் பாஜகவுக்கு 30, காங்கிரஸுக்கு 23 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
குஜராத்தில் ரிபப்ளிக் டி.வி- சி-வோட்டர்ஸ் நடத்திய கணிப்பில், பாஜகவுக்கு 108, காங்கிரஸுக்கு 74 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குக் கணிப்பு முடிவுகள் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “குஜராத் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு எப்போதும் உண்டு என்பது வாக்குக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சியினரின் தரம்தாழ்ந்த அரசியலால் மக்கள் குழப்பம் அடையவில்லை’ என்றார்.
குஜராத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories