குஜராத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கும்: கருத்துக்கணிப்பு!

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

குஜராத்தில் இம்மாதம் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் டிச. 18 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வியாழக்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, வாக்குக் கணிப்பு முடிவுகள் மாலையில் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் சரியான முடிவுகளை கணித்து வெளியிட்டுள்ள நியூஸ் 24 ஹிந்தி செய்தித் தொலைக்காட்சியின் வாக்குக் கணிப்பில், குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 135 இடங்களில் வெற்றி பெறும்; அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா வாக்குக் கணிப்பில் குஜராத்தில் பாஜக 99 முதல் 113 இடங்களிலும், காங்கிரஸ் 68 முதல் 82 இடங்களிலும், பிற கட்சிகள் 1 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என்று கூறியுள்ளது.
“குஜராத்தில் பாஜகவுக்கு 113 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 66 தொகுதிகளும் நிச்சயமாகக் கிடைக்கும். மற்ற கட்சிகள் 3 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது’ என்று டைம்ஸ் நவ் வாக்குக் கணிப்பு உறுதியாகக் கூறியுள்ளது.
ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கணிப்பில் குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 64 தொகுதிகள் வரையே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பாஜக 117 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டிவி-விஎம்ஆர் எடுத்துள்ள கணிப்பில் மத்திய குஜராத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 16, தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு 24, காங்கிரஸுக்கு 30, வடக்கு குஜராத்தில் பாஜகவுக்கு 30, காங்கிரஸுக்கு 23 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
குஜராத்தில் ரிபப்ளிக் டி.வி- சி-வோட்டர்ஸ் நடத்திய கணிப்பில், பாஜகவுக்கு 108, காங்கிரஸுக்கு 74 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குக் கணிப்பு முடிவுகள் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “குஜராத் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு எப்போதும் உண்டு என்பது வாக்குக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சியினரின் தரம்தாழ்ந்த அரசியலால் மக்கள் குழப்பம் அடையவில்லை’ என்றார்.
குஜராத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories