January 26, 2025, 12:05 PM
28.6 C
Chennai

சட்ட விரோத போராட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க அனுமதிக்க முடியாது: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு மோடி ‘குட்டு’!

pm-modi
pm-modi

சட்ட விரோத போராட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க அனுமதிக்க முடியாது: ட்ரம்புக்கு மோடி ‘குட்டு’!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிட்டு, அமெரிக்க அதிபராக பைடனை அங்கீகரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதில், 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாத தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

எனினும், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும்படியும் பேசுவது போன்ற ஒலிப்பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  பொங்கல் கொண்டாட்டம்; வருமான வரித் துறை அலுவலகத்தில் வடிவேலு!

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டி போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் உத்தரவிட்டனர்.

ஆனால் போராட்டக் காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்கள் மீது போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்த வன்முறைச் சம்பவத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…

‘வாஷிங்டனில் நடைபெறும் வன்முறை தொடர்பான செய்திகள் மன வேதனை அளிக்கிறது. அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும். சட்டவிரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகளை தகர்க்க அனுமதிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பயணிகள் கவனத்துக்கு... நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று