December 5, 2025, 4:22 PM
27.9 C
Chennai

தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை நிரூபித்த உதயநிதி: சசிகலா குறித்த சர்ச்சை பேச்சுக்கு டிடிவி கண்டனம்!

udayanidhi-in-karur
udayanidhi-in-karur file picture

முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் திமுக., தலைவர் ஸ்டாலினின் மகனும், தற்போதைய திமுக., இளைஞரணிச் செயலாளரும் ஆன உதயநிதியின் சசிகலா குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனப் பேச்சுக்காக அவருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ.,டிடிவி தினகரன்.

அவர் இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது…

பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்.

கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும்.

தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.

உதயநிதியின் பேச்சுக்கு அவரது தாயார் துர்கா தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்.

அவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

அன்று தாத்தா டி.என்.அனந்த நாயகியிலிருந்து ஆரம்பித்து வைத்ததை பேரன் @Udhaystalin தொடர்ந்து கொண்டுள்ளார்.
@arivalayam சிந்திக்கின்ற பாரம்பர்யமே பெண்களை கேவலப்படுத்துவதாகவே உள்ளது. தலைவர்களே இதை முன்னெடுக்கும் போது தொண்டர்கள் பூங்கோதையை அவமானப் படுத்துவதில் துவங்கி சக பெண் நிர்வாகிகளின் இடுப்பை கிள்ளுவது வரை சாதாரணமாக கடந்து போகிறார்கள்.

எதிர்வினையாக ராசாத்தி அம்மா துவங்கி கனிமொழி, கிருத்திகா வரை பெண்களே இலக்காகிறார்கள். பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் இம்மாதிரி விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள்.

தன் அம்மா வயதிலிருக்கும் சசிகலாவை @Udhaystalin விமர்சனம் செய்கின்ற விதம் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியது. இதை @mkstalin அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. Smt. துர்கா ஸ்டாலின் அவர்களே! செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.

உதயநிதியின் உற்சாகமான சர்ச்சைப் பேச்சு இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை சர்ச்சைக்குரிய விதத்தில் கூறி பேசிய கருத்துகள் அதிமுக.,வினரிடையே கடுங் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories