December 6, 2025, 1:48 AM
26 C
Chennai

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை அயர்ன் பாக்ஸால் சூடு வைத்த அக்காள் கணவன்!

prince
prince

3 வது படிக்கும் சிறுவனுக்கு அக்காவின் கணவர் அயன் பாக்சில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சினை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்கு உடம்பு சரியில்லாதநிலையில் தனது அக்காவின் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளான். மேலும் அக்காவிற்கு துணையாக வீட்டில் சிறு சிறு வேலைகளையும் பார்த்துவந்துள்ளான் சிறுவன்.

இந்நிலையில் சிறுவனின் அக்கா கணவர் பிரின்ஸ் என்பவர் சிறுவனிடம் காசு கொடுத்து, அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று பொருட்கள் வாங்கிவருமாறு அனுப்பியுள்ளார். கடைக்கு சென்ற சிறுவன், கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்ப சற்று தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிறுவனை அழைத்து, அருகில் உள்ள கடைக்கு சென்றுவர இவ்வளவு நேரமா என கண்டித்து சிறுவனின் அக்கா கணவர் பிரின்ஸ் சிறுவனுக்கு அயன் பாக்சினால் சூடு வைத்துள்ளார். பிஞ்சு உடம்பில் அந்த சூட்டை தாங்க முடியால் சிறுவன் கதறி அழுதுள்ளான். இதனை அடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் மாமா பிரின்ஸை கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும், சிறுவனுக்கு இதுபோல் சூடுவைப்பது இது முதல் முறை அல்ல என்பதும், பிரின்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு சிறுவனை அடித்து துன்புறுத்துவது, சூடு வைப்பது வழக்கம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்காவின் கணவரே சிறுவனுக்கு சூடு வைத்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories