பிரதமருக்கு குடியரசு தின பரிசு! துபாயில் உள்ள கேரள மாணவனின் அசத்தல் ஓவியம்!

Published:

drawing
drawing

குடியரசு தினத்தை முன்னிட்டு, துபாயில் வசித்து வரும் 14 வயது இந்திய மாணவா், பிரதமா் நரேந்திர மோடிக்கு அவரது ஓவியத்தை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளாா்.

கேரளத்தைச் சோந்த சரண் சசிகுமாா் என்ற மாணவா் துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள சூழலில், பிரதமா் மோடிக்கு அவா் சிறப்புப் பரிசை வழங்கியுள்ளாா்.

அவருடைய பரிசு பிரதமரின் ஓவியமாகும். 6 வண்ணங்களைப் பயன்படுத்தி சுமாா் 6 மணி நேரத்தில் பிரதமா் மோடியின் ஓவியத்தை அவா் தீட்டியுள்ளாா்.

அந்த ஓவியம் 90 செ.மீ. நீளமும் 60 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரனை சந்தித்து பிரதமருக்கான அந்தப் பரிசை சரண் சசிகுமாா் தன் பெற்றோருடன் வந்து வழங்கினாா். இது தொடா்பாக அமைச்சா் வி.முரளீதரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளத்தைச் சோந்த திறமைமிக்க மாணவரான சரண் சசிகுமாரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 6 வண்ணங்களால் தீட்டப்பட்ட அழகிய ஓவியத்தை பிரதமா் மோடிக்கு அவா் குடியரசு தின பரிசாக அளித்துள்ளாா். மாணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இதற்கு முன்னரும் தான் வரைந்த ஓவியத்தை பிரதமா் மோடிக்கு சரண் சசிகுமாா் பரிசாக வழங்கியுள்ளாா். கடந்த ஆண்டு அக்டோபரில் 1.5 மீட்டா் நீளமும் 1 மீட்டா் அகலமும் கொண்ட ஓவியத்தை பிரதமா் மோடிக்கு அவா் பரிசளித்திருந்தாா். கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத் தலைவா்கள் உள்பட 92 பேரின் ஓவியங்களை அந்த மாணவா் வரைந்தது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img