திருவனந்தபுரம்: கேரளாவில் பணியிடங்களில் புகை மற்றும் மது பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில், கல்வி நிறுவனங்கள், நிர்வாக ரீதியிலான பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் பணியிடங்களில் மது மற்றும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை அரசு ஊழியர்கள் சரிவர கடைபிடிக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பணியிடத்தில் புகை மற்றும் மதுவை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஓட்டுநர்கள் தங்களது பணி நேரத்தில் மது மற்றும் புகையை உபயோகித்தால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் அரசு ஊழியர்கள் புகை, மது பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

