December 6, 2025, 1:44 PM
29 C
Chennai

வங்கி உங்கள் கணக்கில் கமிஷன் எடுக்காமல் இருக்க.. நீங்கள் செய்ய வேண்டியது..!

atm
atm

உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இயந்திரங்களின் மூலம் பெறுவது பொதுவான ஒன்றே. ஆனால் அதற்கு முன்பு உங்கள் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை அறிவது மிக மிக கட்டாயமான ஒன்று.

கணக்கில் இருக்கும் தொகையை விட அதிகமான தொகையை ஏடிஎம்மில் போடுவதன் மூலம் அது தோல்வியடைந்த பரிவர்த்தனையாக (Failed Transaction) மாறிவிடுகிறது. உதாரணமாக உங்கள் கணக்கில் 4 ஆயிரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதைக் கவனிக்காமல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வேண்டும் என்று ஏடிஎம்மில் பதிந்தால் அது Failed Transaction.

சரி இதனால் என்ன மறுபடியும் பேலன்ஸை பார்த்துவிட்டு இருக்கும் தொகையை எடுத்துக்கொள்ளலாமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு ‌

அதாவாது 2020 டிசம்பர் மாதம் முதல் அனைத்து வங்கிகளும் பண பரிவர்த்தனை விதிகளை மாற்றியமைத்தன. ஒவ்வொரு Failed Transaction-க்கும் உங்கள் கணக்கிலிருந்து அபராதம் பிடிக்கப்படும் என்பது அதில் ஒரு விதி. ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு தொகையை அபராதமாகப் பிடித்தம் செய்கின்றன. அதைக் கீழே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவிலேயே இருக்கும் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐயும் ஒன்று. ஒவ்வொரு Failed Transaction-க்கும் 20 ரூபாய் அபராதம் வசூலிக்கிறது. தவிர ஜிஎஸ்டி வரியும் பிடித்தம் செய்யப்படும். எப்படியும் 25 ரூபாய்க்கு மிகாமல் வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் ஹெச்டிஎஃப்சி உள்பட அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் உங்களது Failed Transaction-க்கு 25 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல கொடெக் மஹேந்திரா, யெஸ், ஆக்சிஸ் ஆகிய வங்கிகளும் வாடிக்கையாளர்களிடமிருந்து 25 ரூபாய் அபராதம் வசூலிக்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று நினைப்பதுடன் உங்களது கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதையும் சேர்த்து பார்த்துவிட்டாலே போதும். ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு முன் அந்த ஏடிஎம்மிலேயே ஒரு முறை உங்களது பேலன்ஸை பார்த்துவிடுங்கள்.

இப்போது பெரும்பாலான வங்கிகள் எஸ்எம்எஸ் மூலமே உங்களது பேலன்ஸை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. தவிர பிரத்யேகமாக தனி செயலிகளும் இருக்கின்றன. அதேபோல போன் பே, கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளிலும் உங்களது பேலன்ஸை பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. உங்கள் கைகளில் பல வசதிகள் இருக்கின்றன. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அவ்வளவே.

உங்களது வங்கி தவிர்த்து மற்ற வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் பார்ப்பதற்கும் அபராதம் வசூலிக்கப்படும். பேலன்ஸ் பார்ப்பது மட்டுமல்லாமல் பணம் எடுப்பதற்கும் அபராதம் உண்டு. ஒவ்வொரு வங்கியும் 5 முதல் 8 பரிவர்த்தனைகளுக்கு அபராதம் வசூலிப்பதில்லை. அதற்கு மேல் சென்றால் ஜிஎஸ்டி வரியுடன் அபராதம் பிடிக்கப்படும். எஸ்பிஐயில் 8 முதல் 10 ரூபாய் வரை வசூலிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories