December 6, 2025, 9:41 AM
26.8 C
Chennai

பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 120 சவரன் நகை, ரூ.28 லட்சம் கொள்ளை!

house - 2025

பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 120 சவரன் நகை, ரூ.28 லட்சம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவரின் மகன் சபியுல்லா (வயது 54). இவர் திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியில் கடந்த 19 வருடங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

sabibulla - 2025

அதே பகுதியில் பிரிண்டிங் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 2-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சபியுல்லா ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார் .

இந்நிலையில் அருகில் குடியிருக்கும் உறவினரான ஷியத்துல்லா என்பவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சபியுல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

home - 2025

வீட்டிற்கு வந்த சபியுல்லா வீட்டின் கதவு ஜன்னல் ஆகியவைக் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தது, மேலும் பீரோ உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி ஆய்வாளர் கணபதி தீவிர விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சபியுல்லா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்த போது ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து சபியுல்லாவின் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றது அதில் பதிவாகியுள்ளது.

sabibulla 1 - 2025

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் போலீசார் அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் பணிக்கு வந்து செல்பவர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

போலீஸார் தரப்பில் 120 சவரன் தங்க நகையும், சுமார் 47 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19 லட்சம் பணம் அருகில் இருந்த அறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ரூ.28 லட்சம் கொள்ளைபோனது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வீரபாண்டி போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories