கொரோனா: 85% சிகிச்சையின்றி குணம்: எய்ம்ஸ் இயக்குநர்!

corono
corono

85 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் குணமடைவார்கள் என்பதற்கு ஆதாரமான தரவுகள் எங்களிடம் உள்ளது என எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்த்து பொதுமக்கள் மிகவும் பயத்தில் உள்ளனர்.

ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் எந்த குறிப்பிட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் குணம் அடைவார்கள் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியை எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாராயணா ஹெல்த் தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி, மெதாந்தா தலைவர் நரேஷ் டிஹென் ஆகியோருடன் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இணைந்து கோவிட்-19 பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: கோவிட்-19ல் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ரெம்டேசிவிர், ஸ்டிராய்ட்ஸ் அல்லது வேறு எந்த மருந்துகளின் வடிவத்திலும் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பதற்கான போதுமான தரவு இப்போது எங்களிடம் உள்ளது.

அவர்களில் ஜலதோஷம், காய்ச்சல், புண் போன்ற அம்சங்கள் இருக்கும். சிலருக்க இரப்பை அழற்சி ஏற்படலாம். 5 முதல் 7 நாட்களில் அவை வெறும் அறிகுறி சிகிச்சையால் குணமடைவார்கள்.

அதாவது பாராசிட்டமால், உங்களை நீரேற்றமாக வைத்திருத்தல், வழக்கமான உடற்பயிற்சி, வைட்டமின்களை எடுத்துக்கொள்வது மற்றும் தங்களது உடல் நலம் குறித்து நேர்மறையான எண்ணத்தில் இருப்பது போன்றவற்றின் மூலம் குணமடைவார்கள்.

ஆக்சிஜன் செறிவு வீழ்ச்சியடையக்கூடிய மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட்டால் நாங்கள் சொல்லும் மிதமான நோய் பாதிப்பில் 15 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

நோய் அதிகரிப்பதற்கான பிற அம்சங்களை கொண்ட அந்த சதவீத மக்களுக்கு மட்டுமே நாங்கள் ரெம்டேசிவிர், ஸ்டெராய்டுகள், ஆண்டிகோகுலண்டுகள் வடிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். சில சமயங்களில் பிளாஸ்மாவையும் தருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories