கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ரூ.500! போலி லேப் வைத்து மோசடி!

corono test
corona test

500 ரூபாய்க்கு கொரானா நெகடிவ் போலி சான்றிதழை வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 வயதான ஃபாரூக் ஷேக் மற்றும் 32 வயதான ரஷீத் ஷாகில் ஷேக் ஆகியோர் மும்பையில் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஜோகேஸ்வரியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கொரானா பரிசோதனை செய்யும் நிலையம் நடத்தி வருவதாக வாட்ஸ் அப்பில் பலருக்கு தகவல் வந்தது. அதே சமயம் எங்கும் இல்லாத அளவிற்கு மலிவு விலையில் கொரானா பரிசோதனை செய்து தரப்படுவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதை பார்த்த பல ஆண்களும் பெண்களும், தாங்கள் வெளி நாட்டு பயணம் மற்றும் வெளியூர் பயணத்திற்கு செல்ல இங்கு கொரானா பரிசோதனை செய்து அந்த அறிக்கையை கொடுத்துவிடலாம் என்று நினைத்தனர்.

அதன் படி டெஸ்ட் செய்யாமலே ரூபாய்.500 கொடுத்தால் நெகடிவ் சான்றிதழ் கொடுப்பதாக பேரம் பேசி பலருக்கு வழங்கியுள்ளார்கள்.

இதை பார்த்த பெண் ஒருவர், தனது வாட்ஸ் அப் விளம்பரத்தினை நம்பி பரிசோதனைக்கு சென்ற போது, 500 ரூபாய் அனுப்பினால் உடனே வாட்ஸ் அப்பில் நெகட்டிவ் சான்றிதழ் அனுப்புவதாக கூறியுள்ளனர்.

அதன் படி அவர்கள் ஒரு நெகடிவ் செர்டிபிகேட்டை, லாபரேட்டரி முத்திரையுடன் போலியாக பலருக்கு அனுப்பியுள்ளதையும் அவரிடம் காண்பித்தார்கள். ஆனால் இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அந்த இரு நபர்களை பற்றி விசாரித்து, அவர்களின் மோசடி வேலைகளை கண்டு பிடித்து. பின்னர் போலீசார் மோசடி மற்றும் மோசடி தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories