இறந்த எஜமானி! தண்ணீர், உணவு விடுத்து தகன மேடையருகே இருந்த நாய்!

dog 1
dog 1

பீகாரில் இறந்த பெண்ணின் சடலம் எரிக்கப்பட்ட தகன மேடை அருகே, அவர் வளர்த்து வந்த நாய் 4 நாட்களாக இருந்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் கயா மாவட்டம் ஷெர்காட்டி அடுத்த சத்சங் நகரில் வசிக்கும் பகவன் ததேரா என்பவரின் மனைவி, கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிப்பால் இறந்தார். இவர், ஷெரு என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.

பகவன் ததேரா மனைவியின் சடலம் இறுதி சடங்கு ஷெர்காட்டியில் உள்ள ராம் மந்திர் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த பெண்ணின் சடலத்தை எடுத்து சென்ற போது, அவர் வளர்த்து வந்த ஷெரு செல்லநாயும் பின்தொடர்ந்தே சென்றது.

அந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், அனைவரும் வீடு திரும்ப தொடங்கினர்.

ஆனால், அந்த நாய் சுடுகாட்டிலேயே சோகமாக அமர்ந்திருந்தது. சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துவிடும் என்று நினைத்து, பகவன் ததேரா மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினர்.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஆனால், தொடர்ந்து 4 நாட்களாக அந்த நாய் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு சென்று மீண்டும் பார்த்தனர்.

அங்கே எவ்வித உணவும் சாப்பிடாமல், தனது எஜமானி தகனம் செய்த இடத்திலேயே சோகம் கலந்த மயக்கத்துடன் அமர்ந்திருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள், ஷெருவை வீட்டுக்கு அழைத்து வர முயன்ற போது, அது அவர்களை நோக்கி குரைத்தது.

பின்னர் எப்படியோ, ஷெருவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஒரு சில நாட்கள் உணவு கொடுக்க முயன்று வீட்டிலேயே அடைத்து வைத்தனர். ஆனால், அடுத்த ஒருசில நாட்களில் வீட்டிலிருந்த ஷெரு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதன்பின் எங்கெங்கோ தேடியும் ஷெருவை காணவில்லை.

தனது எஜமானி இறந்த சோகத்தில், தானும் உணவு உண்ணாமல், 4 நாட்களாக தகன மேடை அருகே அமர்திருந்த ஷெரு, ஒரு நன்றியுள்ள பிராணி என்பதை நிரூபித்துள்ளது.

தனக்கு உதவி செய்தவர்களை சக மனிதர்களே மறக்கும் இந்த காலத்தில், உணவளித்த அந்த பெண்ணின் இறப்பை ஷெருவால் மறக்கமுடியவில்லை.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

அது இப்போது எங்கு சென்றது என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ‘தெருவில் சுற்றித் திரிந்த ஒரு நாய்க்கு இறந்த பெண் அன்போடு உணவளித்தாள். பின்னர் அதற்கு ஷெரு என்று பெயர் வைத்து, தனது வீட்டிேலயே வளர்த்து வந்தார்.

அந்த நாய்க்கு தேவையான உணவு, இருப்பிடம், பொது இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என்று, அந்த பெண் நிறைய அன்பு செலுத்துவார்.

தற்போது அந்த பெண் இறந்ததால், தன்னிடம் அன்பு செலுத்த இனி யார் இருப்பார்கள்? என்ற ஏக்கத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தும், எங்கேயோ ஓடிவிட்டது’ என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories