கேரளாவில் அதிகரிக்கும் கரும்பூஞ்சை! ஒருவருக்கு கண் அகற்றப்பட்ட பரிதாபம்!

eye - 2026

கேரளாவில் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக்பங்கஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதனால் ஒருவருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிளாக் பங்கஸ் அல்லது மியூகோமைகோசிஸ் என்று அழைக்கப்படும் கரும்பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா முழுக்க இந்த நோய் தற்போது தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 பேருக்கு இந்த நோய் தாக்கி உள்ளது.இதில் 6 பேர் சர்க்கரை வியாதி பாதிப்புகொண்டவர்கள் . இவர்கள் எல்லோரும் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் பலருக்கு இந்த கரும்பூஞ்சை ஏற்பட தொடங்கி உள்ளது. முக்கியமாக நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக் பங்கஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனாவிற்கு ஸ்டிராய்டு போன்ற மருந்துகள் எடுக்கும் நபர்கள் சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரங்களில் இந்த பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

கேரளாவிலும் இந்த பிளாக் பங்கஸ் தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கேரளாவில் பிளாக் பங்கஸ் தாக்குதலால் 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 8 பேர் மிக மோசமாக பிளாக் பங்கஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொச்சி, மலப்புரம் மாவட்டங்களிலும் கூட இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் கொச்சியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு முகம் முழுக்க வீங்கி, மூக்கு துவாரங்கள் அடைக்கும் அளவிற்கு முகம் வீங்கி இருந்தது. அதேபோல் பலருக்கு கண்கள் சிவந்து, கண்களுக்கு கீழே அரிப்பு ஏற்பட்டு இருந்தது.

மலப்புரம் திரூர் என்று ஊரில் 62 வயது நபருக்கு இதேபோல் கொரோனா ஏற்பட்டு பின்னர் பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளது. இவருக்கு கண்களில் பிளாக் பங்கஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இடது கண் நீக்கப்பட்டுள்ளது. இன்னொரு கண்ணில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கொரோனா ஏற்பட்டு சில நாட்கள் முன் குணமடைந்தார்.

இவருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக ஆக்சிஜன் குறைபாடு காரணமாக ஸ்டிராய்டு மருந்துகளை எடுத்துள்ளார். இதனால் இவருக்கு பிளாக் பங்கஸ் தாக்குதல் மிக மோசமாக இருந்தது என்கிறார்கள்.

இன்னும் சில பிளாக் பங்கஸ் நோயாளிகளுக்கும் இதேபோல் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories