December 6, 2025, 5:42 PM
29.4 C
Chennai

கேரளாவில் அதிகரிக்கும் கரும்பூஞ்சை! ஒருவருக்கு கண் அகற்றப்பட்ட பரிதாபம்!

eye - 2025

கேரளாவில் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக்பங்கஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதனால் ஒருவருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிளாக் பங்கஸ் அல்லது மியூகோமைகோசிஸ் என்று அழைக்கப்படும் கரும்பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா முழுக்க இந்த நோய் தற்போது தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 பேருக்கு இந்த நோய் தாக்கி உள்ளது.இதில் 6 பேர் சர்க்கரை வியாதி பாதிப்புகொண்டவர்கள் . இவர்கள் எல்லோரும் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் பலருக்கு இந்த கரும்பூஞ்சை ஏற்பட தொடங்கி உள்ளது. முக்கியமாக நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக் பங்கஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனாவிற்கு ஸ்டிராய்டு போன்ற மருந்துகள் எடுக்கும் நபர்கள் சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரங்களில் இந்த பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

கேரளாவிலும் இந்த பிளாக் பங்கஸ் தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கேரளாவில் பிளாக் பங்கஸ் தாக்குதலால் 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 8 பேர் மிக மோசமாக பிளாக் பங்கஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொச்சி, மலப்புரம் மாவட்டங்களிலும் கூட இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் கொச்சியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு முகம் முழுக்க வீங்கி, மூக்கு துவாரங்கள் அடைக்கும் அளவிற்கு முகம் வீங்கி இருந்தது. அதேபோல் பலருக்கு கண்கள் சிவந்து, கண்களுக்கு கீழே அரிப்பு ஏற்பட்டு இருந்தது.

மலப்புரம் திரூர் என்று ஊரில் 62 வயது நபருக்கு இதேபோல் கொரோனா ஏற்பட்டு பின்னர் பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளது. இவருக்கு கண்களில் பிளாக் பங்கஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இடது கண் நீக்கப்பட்டுள்ளது. இன்னொரு கண்ணில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கொரோனா ஏற்பட்டு சில நாட்கள் முன் குணமடைந்தார்.

இவருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக ஆக்சிஜன் குறைபாடு காரணமாக ஸ்டிராய்டு மருந்துகளை எடுத்துள்ளார். இதனால் இவருக்கு பிளாக் பங்கஸ் தாக்குதல் மிக மோசமாக இருந்தது என்கிறார்கள்.

இன்னும் சில பிளாக் பங்கஸ் நோயாளிகளுக்கும் இதேபோல் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories