December 6, 2025, 2:12 AM
26 C
Chennai

2 வது ஆண்டாக உபியில் தெரியும் இமயமலை! வைரல் புகைப்படங்கள்!

himalaya
himalaya

தொடர்ந்து 2-வது ஆண்டாக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து இமய மலைச் சிகரங்களைப் பார்க்க முடிகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

வழக்கமாக இமயமலைக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து இமயமலையை காண முடியாது. பனிமூட்டம், காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் காண முடியாத நிலை இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து உ.பி.யின் பல்வேறு நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்களைக் காண முடிந்தது.

இந்நிலையில் 2-வது ஆண்டாக தற்போது உ.பி.யின் சஹாரன்பூரில் இருந்து இமயமலைச் சிகரங்களை காண முடிகிறது.

இந்த நகரிலிருந்து இமயமலைச் சிகரங்கள் வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உ.பி.யின் வேறு சில நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்கள் தெரிகின்றன.

சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்டர் விவேக் பானர்ஜி என்பவர் இந்த புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து விவேக் பானர்ஜி கூறும்போது, ‘இது ஓர் அரிய காட்சி. இமயமலை சிகரங்களை சஹாரன்பூர் வடக்குப் பகுதியில் இருந்து வெறும் கண்களிலேயே காண முடிகிறது. மிகவும் தெளிவாக சிகரங்கள் தெரிகின்றன. 30 முதல் 40 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற காட்சிகள் இங்கு தெரிந்ததாம்.

தற்போது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுவால் அந்தக் காட்சிகள் தெரிவதில்லை. தற்போது சிகரங்கள் தெரிந்ததால் அதை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்’ என்றார்.

அரசு ஊழியரும், சஹரன்பூரைச் சேர்ந்த ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞருமான துஷ்யந்த் குமார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ யிடம், மே 20 அன்று நகரத்திலிருந்து இமயமலையின் படங்களை கிளிக் செய்ததாக தெரிவித்தார்.

“சூரிய அஸ்தமன நேரத்தில், இமயமலையின் கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் பாண்டர்பஞ்ச் வீச்சு ஒளிரும் மற்றும் தெளிவாகத் தெரிந்தன. கடந்த ஆண்டும், ஏப்ரல் மாதத்தில் இந்த வீச்சு மலைகள் இங்கிருந்து தெரிந்தன. சஹரன்பூரிலிருந்து இமயமலையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ”என்று துஷ்யந்த் குமார் ANI இடம் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories