தீமாபுர் சம்பவம்: நாகா. அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

Published:

GRAPHIC CONTENTnA crowd of Indian men suநாகாலாந்தில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி ஒருவரை சிறையில் இருந்து வெளியில் இழுந்து வந்து அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து நாகாலாந்து அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர் சையத் பரீத்கான்(35). இவர், நாகாலாந்தில் கார் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 23, 24-ஆம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்பூரில் பாதுகாப்பு நிறைந்த மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாலியல் பலாத்காரச் சம்பவத்தைக் கேள்விப் பட்ட நாகா பழங்குடியின மக்கள், சையத் மீது கடும் கோபத்தில் இருந்தனர். சையத்துக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். இதை அடுத்து, ஆயிரக்கணக்கில் அவர்கள் சிறை முன்னே திரண்டனர். தீமாபுர் மத்தியச் சிறையை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், சையத்தை சிறைக்கு வெளியே இழுத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று ஊரின் மையப் பகுதியில் வைத்து அடித்துக் கொன்றனர். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி நாகலாந்து அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், சம்பவம் நடந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணித்து குற்றவாளிகளைக் கைது செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது தவிர நாகாலாந்து எல்லைப் பகுதியில் உள்ள அசாமிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img