December 21, 2025, 1:33 PM
28.5 C
Chennai

ஆறு வயது சிறுமியிடம் ஆண்மையைக் காட்டிய அயோக்கியன்! தூக்கிட்டு கொன்ற கொடூரம்!

arjun - 2025

கேரள மாநிலம் இடுக்கி அருகே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த காமகொடூரனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (22). தேயிலை தோட்ட தொழிலாளி.

அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது பக்கத்து குடியிருப்பில் மற்றொரு தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த தொழிலாளிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 30ம் தேதி சிறுமி வீட்டில் தூக்கில் இறந்த நிலையில் கிடந்தார். மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து வண்டிப்பெரியார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அர்ஜூன் தான் குழந்தையின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு அர்ஜூன் அவளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

பல மாதங்களாக இந்த கொடூர செயலை செய்து வந்துள்ளான். சம்பவத்தன்று இதே மாதிரி கொடூரமாக பலாத்காரம் செய்தபோது குழந்தை மயங்கி விட்டது.

உடனே இறந்து விட்டதாக கருதிய அர்ஜூன் குழந்தையை தூக்கில் தொங்க விட்டுள்ளான். இதில் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அர்ஜூனை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து இடுக்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

The Vanishing Votaries of the December Durbar!

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions,

ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

Topics

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

The Vanishing Votaries of the December Durbar!

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions,

ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

Entertainment News

Popular Categories