ஆவணப் படத்தைப் பார்த்தால் மோடி உண்மையைப் புரிந்து கொள்வார் : லெஸ்லி உட்வின்

Published:

leslee-udwinலண்டன்: பிரதமர் மோடி குறைந்தது ஒரு மணி நேரம் ஒதுக்கி, ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தைப் பார்த்தால், உண்மையைப் புரிந்துகொள்வார், என்று கூறியுள்ளார் அந்த ஆவணப் படத்தை இயக்கிய லெஸ்லி உட்வின். தில்லி மருத்துவக் கல்லூரி துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி முகேஷ் சிங்கிடம் தில்லி திகார் சிறையில் எடுக்கப்பட்ட பேட்டி, ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் ஆவணப்படமாகியுள்ளது. இதனை இயக்கிய பிரிட்டனைச் சேர்ந்த லெச்லி உட்வினுக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அந்த ஆவணப் படம் ஒளிபரப்பப் படுவதையும் தடை செய்தது. இந்தியாவின் தடைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்தப் படத்தை இயக்கிய லெஸ்லி உட்வின், பிரதமர் மோடி இந்த ஆவணப் படத்தைப் பார்த்தால் உண்மையைப் புரிந்துகொள்வார் என்று கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினமான நேற்று, லண்டனில் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது. இதில் கலந்துகொண்ட லெஸ்லி உட்வின், “உண்மையில் இந்தியாவின் மகள் மூலமாக இந்தியாவுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால் அதை தவறாகப் புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது. நிர்பயாவுக்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடை போடத் தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப் படுத்தியுள்ளேன். படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது. பிரதமர் மோடி ஒரு மணி நேரம் தனது நேரத்தை ஒதுக்கி இந்த ஆவணப் படத்தைப் பார்த்தார் என்றால் உண்மையைப் புரிந்து கொள்வார். அவரின் ’பெண் குழந்தைகளைக் காப்போம்’ என்ற இயக்கத்தின் மூலம் சொல்லி வரும் அதே கருத்தைத்தான் நானும் எனது ஆவணப்படத்தில் முன் வைத்துள்ளேன்.” என்று பேசினார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img