ஆவணப் படத்தைப் பார்த்தால் மோடி உண்மையைப் புரிந்து கொள்வார் : லெஸ்லி உட்வின்

leslee-udwinலண்டன்: பிரதமர் மோடி குறைந்தது ஒரு மணி நேரம் ஒதுக்கி, ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தைப் பார்த்தால், உண்மையைப் புரிந்துகொள்வார், என்று கூறியுள்ளார் அந்த ஆவணப் படத்தை இயக்கிய லெஸ்லி உட்வின். தில்லி மருத்துவக் கல்லூரி துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி முகேஷ் சிங்கிடம் தில்லி திகார் சிறையில் எடுக்கப்பட்ட பேட்டி, ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் ஆவணப்படமாகியுள்ளது. இதனை இயக்கிய பிரிட்டனைச் சேர்ந்த லெச்லி உட்வினுக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அந்த ஆவணப் படம் ஒளிபரப்பப் படுவதையும் தடை செய்தது. இந்தியாவின் தடைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்தப் படத்தை இயக்கிய லெஸ்லி உட்வின், பிரதமர் மோடி இந்த ஆவணப் படத்தைப் பார்த்தால் உண்மையைப் புரிந்துகொள்வார் என்று கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினமான நேற்று, லண்டனில் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது. இதில் கலந்துகொண்ட லெஸ்லி உட்வின், “உண்மையில் இந்தியாவின் மகள் மூலமாக இந்தியாவுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால் அதை தவறாகப் புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது. நிர்பயாவுக்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடை போடத் தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப் படுத்தியுள்ளேன். படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது. பிரதமர் மோடி ஒரு மணி நேரம் தனது நேரத்தை ஒதுக்கி இந்த ஆவணப் படத்தைப் பார்த்தார் என்றால் உண்மையைப் புரிந்து கொள்வார். அவரின் ’பெண் குழந்தைகளைக் காப்போம்’ என்ற இயக்கத்தின் மூலம் சொல்லி வரும் அதே கருத்தைத்தான் நானும் எனது ஆவணப்படத்தில் முன் வைத்துள்ளேன்.” என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories