இந்துக்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம்! பிரபல பிரியாணி கடைக்கு கண்டனம்!

Niyaas
Niyaas

மத உணர்வுகளை காயப்படுத்தியதாக பிரபல பிரியாணி உணவகத்துக்கு எதிராக இந்து மத அமைப்பினர் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த Niyaz என்ற உணவகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அந்த உணவகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த விளம்பரம் இந்து மத உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டின் பேரில் அந்த சங்கிலித் தொடர் உணவகங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் மூடியுள்ளனர்.

பெங்களூருவில் Niyaz என்ற ஹோட்டல் நிறுவனம் பிரபலமாக விளங்கி வருகிறது. பெங்களூரு நகரம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது இந்த உணவகம். இந்த ஹோட்டல் அதனுடைய பிரியாணிக்காக பிரபலமானதாக விளங்குகிறது.

சமீபத்தில் Niyaz ஹோட்டல் சார்பில் அதனுடைய சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் போஸ்டர் பகிரப்பட்டிருந்தது. அதில் சாமியார் ஒருவர் தனது சீடர்களை பார்த்தவாறு அமர்ந்து, இந்த ஓட்டலின் பிரியாணியை ருசித்த பின்னர் எனக்காக தியாகம் எதுவும் செய்ய வேண்டாம் இந்த பிரியாணி தந்தால் போதும் என சொல்வதாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் இந்த விளம்பரம் படத்தை பகிர்ந்து எங்கள் பிரியாணி பிற பிரியாணிகளுக்கு அகம் பிரம்மாஸ்மி என சொல்கிறது என தெரிவித்துள்ளனர். அகம் பிரம்மாஸ்மி என்றால் நானே தெய்வீகமானவன் என அர்த்தம்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. இந்து மத உணர்வுகளை காயப்படுத்தி ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் தயாரித்திருப்பதைக் கண்டித்து பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் பாஜகவினரும் இந்த விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட காவல்துறையினர் அந்த ஓட்டல் கிளைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக மூட உத்தரவிட்டு, பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே அந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கும் ஓட்டல் நிர்வாகம், இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதால் மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories