இந்துக்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம்! பிரபல பிரியாணி கடைக்கு கண்டனம்!

Niyaas
Niyaas

மத உணர்வுகளை காயப்படுத்தியதாக பிரபல பிரியாணி உணவகத்துக்கு எதிராக இந்து மத அமைப்பினர் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த Niyaz என்ற உணவகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அந்த உணவகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த விளம்பரம் இந்து மத உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டின் பேரில் அந்த சங்கிலித் தொடர் உணவகங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் மூடியுள்ளனர்.

பெங்களூருவில் Niyaz என்ற ஹோட்டல் நிறுவனம் பிரபலமாக விளங்கி வருகிறது. பெங்களூரு நகரம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது இந்த உணவகம். இந்த ஹோட்டல் அதனுடைய பிரியாணிக்காக பிரபலமானதாக விளங்குகிறது.

சமீபத்தில் Niyaz ஹோட்டல் சார்பில் அதனுடைய சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் போஸ்டர் பகிரப்பட்டிருந்தது. அதில் சாமியார் ஒருவர் தனது சீடர்களை பார்த்தவாறு அமர்ந்து, இந்த ஓட்டலின் பிரியாணியை ருசித்த பின்னர் எனக்காக தியாகம் எதுவும் செய்ய வேண்டாம் இந்த பிரியாணி தந்தால் போதும் என சொல்வதாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் இந்த விளம்பரம் படத்தை பகிர்ந்து எங்கள் பிரியாணி பிற பிரியாணிகளுக்கு அகம் பிரம்மாஸ்மி என சொல்கிறது என தெரிவித்துள்ளனர். அகம் பிரம்மாஸ்மி என்றால் நானே தெய்வீகமானவன் என அர்த்தம்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. இந்து மத உணர்வுகளை காயப்படுத்தி ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் தயாரித்திருப்பதைக் கண்டித்து பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் பாஜகவினரும் இந்த விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட காவல்துறையினர் அந்த ஓட்டல் கிளைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக மூட உத்தரவிட்டு, பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே அந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கும் ஓட்டல் நிர்வாகம், இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதால் மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories