சொந்த சித்தப்பாவால் 13 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்!

vankodumai - 2026

தாயில்லாத மகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு நம்பிக்கையுடன் சென்றிருக்கிறார் தந்தை. ஆனால் சிறுமியை சீரழித்து அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்த சித்தப்பா. குற்ற உணர்ச்சியும் போலீஸ் தேடுதல் வேட்டையும் துரத்த அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார் அந்த 13 வயது சிறுமி. சிறுமியின் தாயார் காலமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தந்தையும், தாத்தா, பாட்டியும்தான் சிறுமியை வளர்த்து வந்துள்ளனர்.

தந்தையும் பிழைப்புக்காக கோவையில் தங்கி இருக்கிறார். கோவைக்கு போகும்போது, தன் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அப்பா, அம்மாவிடமும் தன் தம்பி செந்திலிடமும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால், தம்பியோ அந்த சிறுமிக்கு சித்தப்பாவாக நடந்துகொள்ளவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவலறிந்து ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் கீரமங்கலம் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

இதற்கிடையில் சிறுமியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரித்து வந்த நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்தன.

அதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடற்கூறு ஆய்வின்போது சிறுமியின் வயிற்றில் ஏழு மாத பெண் சிசு இறந்த நிலையில் இருந்திருக்கிறது. இதையடுத்து சிசுவை டிஎன்ஏ ஆய்வுக்காக மருத்துவக்குழுவினர் அனுப்பி இருக்கின்றனர்.

இதையடுத்து இந்த வழக்கு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்பது பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது சிறுமியின் சித்தப்பா செந்தில் தான் காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடினர்.

இதை அறிந்த செந்தில் தலைமறைவாகி விட்டார். இதனால் செந்திலின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இரண்டு நாள் கழித்து கொத்தமங்கலம் அருகே சிறுமியின் சித்தப்பா செந்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

அங்கே விரைந்து சென்ற போலீசார் செந்திலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்ற உணர்ச்சியில் சித்தப்பா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories