December 6, 2025, 1:03 AM
26 C
Chennai

சொந்த சித்தப்பாவால் 13 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்!

vankodumai - 2025

தாயில்லாத மகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு நம்பிக்கையுடன் சென்றிருக்கிறார் தந்தை. ஆனால் சிறுமியை சீரழித்து அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்த சித்தப்பா. குற்ற உணர்ச்சியும் போலீஸ் தேடுதல் வேட்டையும் துரத்த அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார் அந்த 13 வயது சிறுமி. சிறுமியின் தாயார் காலமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தந்தையும், தாத்தா, பாட்டியும்தான் சிறுமியை வளர்த்து வந்துள்ளனர்.

தந்தையும் பிழைப்புக்காக கோவையில் தங்கி இருக்கிறார். கோவைக்கு போகும்போது, தன் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அப்பா, அம்மாவிடமும் தன் தம்பி செந்திலிடமும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால், தம்பியோ அந்த சிறுமிக்கு சித்தப்பாவாக நடந்துகொள்ளவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவலறிந்து ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் கீரமங்கலம் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சிறுமியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரித்து வந்த நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்தன.

அதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடற்கூறு ஆய்வின்போது சிறுமியின் வயிற்றில் ஏழு மாத பெண் சிசு இறந்த நிலையில் இருந்திருக்கிறது. இதையடுத்து சிசுவை டிஎன்ஏ ஆய்வுக்காக மருத்துவக்குழுவினர் அனுப்பி இருக்கின்றனர்.

இதையடுத்து இந்த வழக்கு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்பது பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது சிறுமியின் சித்தப்பா செந்தில் தான் காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடினர்.

இதை அறிந்த செந்தில் தலைமறைவாகி விட்டார். இதனால் செந்திலின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இரண்டு நாள் கழித்து கொத்தமங்கலம் அருகே சிறுமியின் சித்தப்பா செந்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அங்கே விரைந்து சென்ற போலீசார் செந்திலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்ற உணர்ச்சியில் சித்தப்பா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories