‘அயோத்தி நாயகன்’ கல்யாண் சிங் காலமானார்!

kalyansingh1
kalyansingh1

அயோத்தி நாயகன், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாண்சிங் (89).

கடந்த 1967ஆம் ஆண்டு முதல் ஒன்பது தேர்தல்களில் எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அயோத்தி நாயகன் என்று இவர் அழைக்கப் படக் காரணமாக இருந்தது, 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப் பட்ட விவகாரம் தான். அயோத்தி ராமர் கோயில் குறித்து நடந்த ரத யாத்திரைகளில் தீவிரமாக செயலாற்றியவர். பின்னாளில் இவர் முதல்வராக இருந்த போதுதான், அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டது. தற்போது அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பாதைகள் சுமுகமாக தீர்க்கப் பட்டு, கோயில் கட்டப் பட்டு வருகிறது. அவர் கண்ட கனவு நனவாவதைப் பார்க்கும் முன்பே தமது 89வது வயதில் அவர் காலமானது, தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது தைரியமான நடவடிக்கைகளால், அயோத்தி விவகாரத்தில் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் விலக்கி வைக்கப்பட்டவராகவும் இருந்தார். இதன் காரணத்தாலேயே இரு முறை பாஜக.,வை விட்டு வெளியேறி, பின்னர் மீண்டும் கட்சியில் சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கி செயலாற்றினார். ஆனால் பின்னர் 2004 ஆம் ஆண்டில் பாஜ.,வுடன் இணைந்தார். அதை அடுத்து 2004ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக.,சார்பில் போட்டியிட்டு எம்பி., ஆனார்.

பின்னர் மீண்டும் வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிட்டு, 2009ம் ஆண்டில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் இரண்டாவது முறையாக 2014ஆம் ஆண்டில் பாஜக.,வில் இணைந்தார். அதன் பின்னர், ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆக.21 சனிக்கிழமை இரவு அவர் காலமானார்.

கல்யாண்சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories