காதலர்களின் தற்கொலை முயற்சி.. மலை உச்சியில் இருந்து குதித்த காதலன் உயிரிழப்பு!

hill station
hill station

இடுக்கி அருகே உள்ள மரயூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா. இவர் பக்கத்து ஊரான பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த நாதிர்ஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் கடந்த சில வருடமாக காதலித்து வந்த நிலையில் குடும்பத்திற்கு விஷயம் தெரிய வந்துள்ளது. ஆனால் இரண்டு குடும்பமும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து நாதிர்ஷா தனது காதலி நிகிலாவை காரில் அழைத்துக்கொண்டு மரயூர் சென்றுள்ளார். மலை உச்சிக்கு அருகே அழைத்து சென்றுவிட்டு, வா தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இரண்டு வீட்டிலும் கண்டிப்பாக திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாம் சேர்ந்து வாழ முடியாது. நீ இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை. அதனால் வா தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு, தற்கொலை எல்லாம் வேண்டாம். வா குடும்பத்திடம் பேசலாம் என்று நிகிலா கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து நாதிர்ஷா வறுபுறுத்தினார். இந்த நிலையில்தான் நிகிலாவும் தற்கொலைக்கு அரைமனத்தோடு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து நிகிலா நாதிர்ஷா சேர்ந்து ஒன்றாக வீடியோ வெளியிட்டுள்ளனர். நாங்கள் தற்கொலை செய்ய போகிறோம் என்று கூறி இரண்டு பேரும் வீடியோ வெளியிட்டு தங்கள் குடும்பத்திற்கு அனுப்பி உள்ளனர்.

ஆனால் நிகிலா முழு விருப்பம் இன்றியே தற்கொலைக்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதன்பின் மலைக்கு மேல் ஏறி தற்கொலை செய்யும் முன் நாதிர்ஷா, நாம் கீழே விழுந்தால் உயிர் பிழைக்க கூடாது. அதனால் கையை அறுத்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார். ஆனால் இதற்கு நிகிலா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் கட்டாயப்படுத்தி அவரின் கையை நாதிர்ஷா அறுக்க வைத்துள்ளார். இதன் பின் நாதிர்ஷா தனது கையை அறுத்துக்கொண்டார்.

கையில் ரத்தம் வந்ததை பார்த்ததும் நிகிலா.. வேண்டாம் நாம் தற்கொலை செய்ய வேண்டாம். வா மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். ஆனால் நாதிர்ஷா சொன்னதை கேட்காமல் மலையில் இருந்து அவசரப்பட்டு கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நாதிர்ஷா உயிரிழந்து விட்டார். ஆனால் நிகிலா மலையில் இருந்து விழவில்லை. கையில் ரத்தம் சொட்ட சொட்ட இவர் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்.

இதையடுத்து கையில் வெட்டுப்பட்டதால் ரத்தத்தை இழந்த நிகிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் சீரியசாக இருந்தவர் தற்போது கொஞ்சம் உடல்நிலை சரியாகி உள்ளார். தனக்கு தற்கொலை செய்ய தொடக்கத்தில் இருந்தே விரும்பம் இல்லை என்றும், கஷ்டப்பட்டே கடைசியில் மனம் மாறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories