டிகிரி போதும்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

bank-1
bank-1

கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் கரூரை மையமாகக்கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கி தான் கரூர் வைஸ்யா வங்கி. தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இவ்வங்கியில் பணிபுரிவதற்கு அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் தற்போது business development associate பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கியில் Business development associtate ஆக பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டயப்படிப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொலைத்தூர கல்வியில் படித்தவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான திறன் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் இந்த வேலைக்கு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.karurvysyabank.co.in என்ற இணையதளப்பக்கத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் விண்ணப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தப் பிறகு அவர்களுக்கு நேர்காணல் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வும் இல்லை என்பதால் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து இப்பணிக்கு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணலுக்கான தேதி மற்றும் இடம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

மாத வருமானம் : கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate ஆக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 18 ஆயிரம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் இப்பணி குறித்த கூடுதல் விபரங்களை https://wpassets.adda247.com/wp-content/uploads/multisite/2021/08/25180551/KVB-Recruitment.pdf என்ற இணையதளப்பக்கத்தில் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories