போட்டியின் முடிவு… இந்திய பந்து வீச்சாளர்களின் கையில்!

ind vs nz
ind vs nz

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி
– நான்காம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஐந்து ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்திருந்த இந்திய அணி இன்று உணவு இடைவேளைக்கு முன்னர் மேலும் நான்கு விக்கட்டுகளை இழந்தது. முதலில் புஜாரா 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ரஹானே 4 ரன்னுக்கும் அகர்வால் 17 ரன்னுக்கும், ஜதேஜா ரன் எதுவும் எடுக்காமலுல் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அஷ்வினும் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஆறாவது விக்கட்டிற்கு இவர்கள் இருவரும் 52 ரன் சேர்த்த நிலையில் அஷ்வின் ஆட்டமிழந்தார். நேற்று விக்கட் கீப்பிங் செய்யாத விருத்திமான் சாஹா இன்று அஷ்வின் ஆட்டமிழந்ததும் விளையாட வந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் சாஹாவும் சேர்ந்து ஏழாவது விக்கட்டிற்கு 64 ரன்கள் எடுத்தனர்.

இந்த சமயத்தில் ஷ்ரேயாஸ் 65 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். பின்னர் அக்சர் படேலும் சாஹாவும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 234 ரன்னுக்கு உயர்த்தினர். அப்போது அணித்தலைவர் ரஹானே ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். இந்திய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 234 ரன் கள் எடுத்தது. சாஹா (61), அக்சர் படேல் (28) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இன்று 4 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. அதில் வில் யங் 2 ரன்னுக்கு அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி ஆட்ட முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 4 ரன் எடுத்துள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இன்றைய ஆட்டத்தின் சிறப்பு அம்சங்கள் ஷ்ரேயாஸ் ஐயரின் 65 ரன், சாஹாவின் 61 ரன் இவர்கள் இருவருக்கும் துணையாக நின்று ஆடிய அஷ்வின் எடுத்த 32 ரன், அக்சர் படேல் எடுத்த 28 ரன் ஆகியவற்றைச் சொல்ல வேண்டும்.

நியூசிலாந்து அணியின் டிம் சௌதீயும் கைல் ஜேமிசனும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும்போது சாஹா விக்கட் கீப்பிங் செய்யவில்லை; கே.எஸ். பரத் கீப்பிங் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories