கணவர் கொடுமைப் படுத்துகிறார்: நடிகை ரதி போலீஸில் புகார்

Published:

rathiமும்பை: தனது கணவர் அனில் தன்னைக் கொடுமைப் படுத்துவதாக முன்னாள் நடிகை ரதி போலீஸில் புகார் அளித்துள்ளார். மும்பை காவல் துறை ஆனையர் அலுவலகத்துக்கு வந்த நடிகை ரதி தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என் கணவர் என்னை அடித்துத் துன்புறுத்துகிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். அவரது புகார் குறித்து கருத்து தெரிவித்த துணை ஆணையர் எஸ்.ஜெயகுமார், ரதியின் புகாரின் பேரில் அனில் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார் நடிகை ரதி, புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான அவர் ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் கமல் ஹாஸனுடன் உல்லாசப்பறவை உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் ஹிந்தி திரையுலகம் சென்ற அவர் 1985ம் ஆண்டு அனில் விர்வானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். அவரது மகன் தனுஜ் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img