புது தில்லி: மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் தகவல், தொலைத் தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தை தற்போது அமல்படுத்தி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் திறனை அதிகரிக்கவும், எப்போதும் எங்கு வேண்டுமானாலும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களுக்கும் இது உதவும். இந்த இயக்கத்தின் கீழ், தேசிய மேம்பட்ட பயிலும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பொறியியல், அறிவியல் துறைகளின் 810 பாடப்பிரிவுகள் இணைய தளத்தில் ஏற்கனவே உள்ளன. ஊடக மையங்களும் கல்வி தொடர்பு சங்கமும் இணைந்து எட்டு இளநிலைப் பாடங்களுக்கு இணைய உள்ளடக்கத்தைத் தயார் செய்துள்ளன. 770 பரிசோதனை கொண்ட ஒன்பது பொறியியல் அறிவியல் துறைகளில் 126க்கும் மேற்பட்ட கணிணி ஆராய்ச்சி கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. 1500 குரல் வழி இணையதளத்தில் உள்ளன. வடிவமைப்புகாகவும் பல்வேறு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல், தொலைத்தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தின் கீழ் ஒரு ஜி.பி.பி.எஸ் கண்ணாடி இழை மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (மகாராஷ்டிரா உட்பட நாட்டில் பல்கலைக்கழகங்கள் அளவிலான நிறுவனங்கள்) இணைக்கப்பட்டுள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி மக்களவையில் இன்று தெரிவித்தார்.
ஃபைபர் ஆப்டிகல் மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இராணி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

