படேல் பிரதமர் ஆகியிருந்தால் காஷ்மீர் முழுதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும்: நேருவைத் தாக்கிய மோடி

புது தில்லி:

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லப பாய் படேல் மட்டும் பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீர் முழுதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசினார் பிரதமர் மோடி. அவரது இன்றைய உரை குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய அரசியல் சூழலில், பட்ஜெட் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோடி பேசினார்.

நாடாளுமன்ற மக்களவையில் மோடி பேசியபோது, ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் பேசுவது விந்தையாக இருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக மட்டுமே காங்கிரஸ் உழைத்தது. ஆந்திராவின் பெருமைக்குரிய மைந்தர் நீலம் சஞ்சீவி ரெட்டியை காங்கிரஸ் அவமானபடுத்தியது. அதை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியாவில் எவரும் காங்கிரஸ் கட்சியிடம் ஜனநாயகம் குறித்து பாடம் கேட்கவில்லை.

கேரளாவில் காங்கிரஸ் செயல்பட்டது எப்படி? பஞ்சாபில் அகாலிதளத்தை காங்கிரஸ் எப்படி நடத்தியது? தமிழகத்தில் அது நடந்து கொண்டது எவ்வாறு? தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி எல்லாம் பல மாநில அரசுகளை காங்கிரஸ் கலைத்தது ஏன்? நிச்சயமாக இது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லைதான். ராஜீவ் ஹைதராபாத்துக்குச் சென்ற போது, காங்கிரஸ் தலைவராக இருந்த அஞ்சையாவிடம் அவர் எப்படி நடந்து கொண்டார்? பெருந்தலைவரை அவர் அவமானப் படுத்தினார். சொந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரையே ஆதரிக்காமல் பின்வாங்கிய கட்சி காங்கிரஸ்.

காங்கிரஸில் உள்ள 15 குழுக்களில் 12 ஐ உருவாக்கியவர் சர்தார் வல்லப பாய் படேல். ஆனால் அவரை அக்கட்சி பிரதமர் ஆக்கவில்லை. படேல் அன்று பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கொண்டு சென்றிருக்க முடியாது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும்! – என்று பேசினார் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories