December 5, 2025, 9:37 PM
26.6 C
Chennai

படேல் பிரதமர் ஆகியிருந்தால் காஷ்மீர் முழுதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும்: நேருவைத் தாக்கிய மோடி

புது தில்லி:

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லப பாய் படேல் மட்டும் பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீர் முழுதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசினார் பிரதமர் மோடி. அவரது இன்றைய உரை குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய அரசியல் சூழலில், பட்ஜெட் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோடி பேசினார்.

நாடாளுமன்ற மக்களவையில் மோடி பேசியபோது, ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் பேசுவது விந்தையாக இருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக மட்டுமே காங்கிரஸ் உழைத்தது. ஆந்திராவின் பெருமைக்குரிய மைந்தர் நீலம் சஞ்சீவி ரெட்டியை காங்கிரஸ் அவமானபடுத்தியது. அதை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியாவில் எவரும் காங்கிரஸ் கட்சியிடம் ஜனநாயகம் குறித்து பாடம் கேட்கவில்லை.

கேரளாவில் காங்கிரஸ் செயல்பட்டது எப்படி? பஞ்சாபில் அகாலிதளத்தை காங்கிரஸ் எப்படி நடத்தியது? தமிழகத்தில் அது நடந்து கொண்டது எவ்வாறு? தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி எல்லாம் பல மாநில அரசுகளை காங்கிரஸ் கலைத்தது ஏன்? நிச்சயமாக இது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லைதான். ராஜீவ் ஹைதராபாத்துக்குச் சென்ற போது, காங்கிரஸ் தலைவராக இருந்த அஞ்சையாவிடம் அவர் எப்படி நடந்து கொண்டார்? பெருந்தலைவரை அவர் அவமானப் படுத்தினார். சொந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரையே ஆதரிக்காமல் பின்வாங்கிய கட்சி காங்கிரஸ்.

காங்கிரஸில் உள்ள 15 குழுக்களில் 12 ஐ உருவாக்கியவர் சர்தார் வல்லப பாய் படேல். ஆனால் அவரை அக்கட்சி பிரதமர் ஆக்கவில்லை. படேல் அன்று பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கொண்டு சென்றிருக்க முடியாது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும்! – என்று பேசினார் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories